Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது - மாநகர போக்குவரத்து கழகம்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:17 IST)
கரையை  நோக்கி வரும் மாண்டஸ் புயல் சக்திவாய்ந்த புயலாக  நெருங்கி வரும் நிலையில்,இன்றிரவு  பேருந்துகளும் இயங்காது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவைக் கரையைக் கடக்க உள்ளது. எனவே, புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு 2 மணி நேரமும்,அதன் பின் 2 மணி நேரமும், கிழக்கு கடற்கரைச்சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  4மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியானது.

ALSO READ: மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்
 
இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது,

சென்னையில் மட்டும் இரவில் 550 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்றிரவு அனைத்துப் பேருந்துகளும் இயங்காது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Edited By Sinoj  
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments