Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி – தமிழகம் இடையே பேருந்து இயக்கம் : அரசு அனுமதி!

Webdunia
புதன், 20 மே 2020 (09:40 IST)
நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி – தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. மூன்று கட்ட ஊரடங்குகள் முடிந்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு வகையான தொழில்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போக்குவரத்து தொடங்குவது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்துள்ளது. சென்னையில் 200 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்பட உள்ளன. இன்னமும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில், முதன்முறையாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலிருந்து காரைக்கால், நாகப்பட்டிணம் வழியாக காரைக்கால் வரை செல்லும் பேருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தமிழகம் வழியாக செல்வதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியளர்கள் உரிய பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments