தமிழகம் முழுவதும் தொடங்கியது பேருந்துகள் ஸ்ட்ரைக்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (09:51 IST)
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
 
இந்த கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை என்பதும், போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இதனால் இன்று முதல் முதல் அரசு பேருந்து ஓடவில்லை. சென்னையை பொறுத்தவரை 50 % பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து துறை சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments