Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழுப்புரத்தில் பேருந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 31 பேர் படுகாயம்

விழுப்புரத்தில் பேருந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 31 பேர் படுகாயம்
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (12:36 IST)
விழுப்புரத்தில் அதிகாலை அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 31 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

 
அரசுப்பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து நகருக்குள் விழுப்புரம் நகருக்குள் வந்த கொண்டிருந்தது.
 
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஜானகிபுரத்திற்கு அருகே வந்துகொண்டிருந்தது, இந்த இரண்டு பேருந்துகளும் மோதின.
 
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த விபத்திற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil