Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரிந்த பிளாஸ்டிக் பைப்புகள்..! குப்பையில் எரிந்த தீ பரவியதால் விபரீதம்..!!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:15 IST)
ராசிபுரம் அருகே குப்பைக்கு பற்றிய தீ, காற்றின் வேகத்தில் அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட பிளாஸ்டிக் பைப்புகளில்  பரவி சுமார் 3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது.
 
நாமக்கல் மாவட்டம்  குருசாமிபாளையம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நாராயணா தியேட்டர் திடலில் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.   அதன்  அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர் யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் பரவி  கொழுந்து விட்டு எறிந்தது.

ALSO READ: கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

பல அடி உயரத்துக்கு கரும் புகை வெளியேறியதால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்  சுமார் 3 லட்சம் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments