Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரிந்த பிளாஸ்டிக் பைப்புகள்..! குப்பையில் எரிந்த தீ பரவியதால் விபரீதம்..!!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:15 IST)
ராசிபுரம் அருகே குப்பைக்கு பற்றிய தீ, காற்றின் வேகத்தில் அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட பிளாஸ்டிக் பைப்புகளில்  பரவி சுமார் 3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது.
 
நாமக்கல் மாவட்டம்  குருசாமிபாளையம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நாராயணா தியேட்டர் திடலில் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.   அதன்  அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர் யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் பரவி  கொழுந்து விட்டு எறிந்தது.

ALSO READ: கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

பல அடி உயரத்துக்கு கரும் புகை வெளியேறியதால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்  சுமார் 3 லட்சம் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments