Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்ல மெல்ல வலுவிழக்கும் புரெவி புயல்! – தமிழகத்தில் நீடிக்கும் மழை!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (09:35 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் அருகே கடலில் நிலை கொண்டிருந்த நிலையில் மேல்ல வழுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருமாறிய நிலையில் இலங்கையை கடந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்ட புயல் கடந்த 4 நாட்களாக நகராமல் இருந்ததால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காற்றின் வேகம் குறையும் என்றாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments