Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்.25 ஜோடி மாடுகள் பங்கேற்பு!

J.Durai
புதன், 1 மே 2024 (15:15 IST)
சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனார்கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.
 
இதில், 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், பெரியமாட்டுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டுக்கு 7 கிமீ தொலைவும், பூஞ்சிட்டு பிரிவுக்கு 5 கிமீ தொலைவும் போட்டி எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்து.
 
பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
 
சிவகங்கை மேலூர் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில்  சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
 
பந்தயத்தை சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மூன்று பிரிவுகளாக நடந்த போட்டிகளில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments