Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று அடுக்கு மாடி இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு - திருச்சியில் பரிதாபம்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (10:08 IST)
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் உள்ள ஒரு மூன்றடுக்கு மாடு கட்டிடம் இடிந்து விழந்ததில், இரு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


 

 
நேற்று திருச்சியில் கனத்த மழை பொழிந்தது. இதனால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். எனவே, போலீசாரும், பொதுமக்களும், மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதில் இதுவரை 6 பேரை போலிசார் மீட்டுள்ளனர். அதில், தந்தையும், மகனுமான கார்த்திக்(45), ஹரீஸ் (6) ஆகியோர் மருத்துவமனையில் இறந்துவிட்டனர். ஹரீஸின் தாய் உட்பட மற்ற 3 பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்னும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், அவர்களை உயிரோடு மீட்கும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments