Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு மாட்டுக் கன்று போல், வெண்ணிறத்தில் கன்று ஈன்ற எருமை மாடு

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (11:41 IST)
ஈரோடு அருகே விவசாயியின் எருமை ஒன்று, பசு மாட்டுக் கன்றுபோல் வெள்ளை நிறத்தில் ஈன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது புதுப்பாளையம். இங்குள்ள பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் விவசாயி. கால்நடைகளை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் 20 எருமைகளும் 4 பசு மாடுகளும் உள்ளன. இவற்றை வைத்துப் பால் கறந்து ஊற்றி, விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
 
இவர் வளர்த்த எருமை ஒன்று, நேற்று கன்று ஈன்றது. கன்று வெளியே வரும்வரை எவ்விதப் பரபரப்பும் இல்லை. வழக்கமாக எருமைக்கு சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தனர். எருமை வயிற்றில் இருந்து கன்று வெளியே வந்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் எருமை ஈன்ற கன்று, பசு மாட்டுக் கன்றுபோல் வெண்மையாக இருந்தது. இதன் காரணம் தெரியவில்லை. 
 
இந்த அதிசயக் கன்றை, அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments