Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு மாட்டுக் கன்று போல், வெண்ணிறத்தில் கன்று ஈன்ற எருமை மாடு

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (11:41 IST)
ஈரோடு அருகே விவசாயியின் எருமை ஒன்று, பசு மாட்டுக் கன்றுபோல் வெள்ளை நிறத்தில் ஈன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது புதுப்பாளையம். இங்குள்ள பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் விவசாயி. கால்நடைகளை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் 20 எருமைகளும் 4 பசு மாடுகளும் உள்ளன. இவற்றை வைத்துப் பால் கறந்து ஊற்றி, விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
 
இவர் வளர்த்த எருமை ஒன்று, நேற்று கன்று ஈன்றது. கன்று வெளியே வரும்வரை எவ்விதப் பரபரப்பும் இல்லை. வழக்கமாக எருமைக்கு சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தனர். எருமை வயிற்றில் இருந்து கன்று வெளியே வந்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் எருமை ஈன்ற கன்று, பசு மாட்டுக் கன்றுபோல் வெண்மையாக இருந்தது. இதன் காரணம் தெரியவில்லை. 
 
இந்த அதிசயக் கன்றை, அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

Show comments