Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட பரிதாபம்..!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:23 IST)
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் பிஎஸ்என்எல் ஊழியர் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சியை சேர்ந்த அண்ணாதுரை என்ற  பிஎஸ்என்எல் ஊழியர் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாதுரை நேற்று குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. வழக்கம் போல் போதையில் இருந்த அவர் முதல் மனைவியிடம் தகராறு செய்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி தனது கணவனின் கழுத்தை நைலான் கயிற்றால் நெருக்கி கொலை செய்துள்ளார். 
 
தனது கணவரை கொலை செய்ததை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அவர் சொல்ல காவல்துறையினர் விரைந்து வந்து அவரை கைது செய்து அவருடைய கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த பிஎஸ்என்எல் ஊழியர் போதை காரணமாக முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments