Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலகங்களில் நுழைய இடைத்தரகர்களுக்கு தடை

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (11:35 IST)
சார் பதிவாளர் அலுவலகங்களில் நுழைய இடைத்தரகர்களுக்கு தடைவிதித்து உத்தரவு. இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் தில்லுமுல்லுகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக  578 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் குளறுபிடிகளைத் தடுக்கும் விதமாக, அவர்களை அலுவலகத்தினுள் நுழைய தடை விதித்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சியைத் தவிர வேறு யாரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments