Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: உடையும் நிலையில் பழைய பாலம்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:11 IST)
கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  
முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள பழைய பாலம் உடையும் நிலையில் காணப்படுகிறது. 
 
காவிரி ஆற்றுக்கு 67,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.
 
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் 18 வது தூண் சரிந்துள்ளது. இதனால் பாலமே உடையும் நிலையில் காணப்படுகிறது. அப்படியே பாலம் உடைந்தாலும் வெள்ளபெருக்கு குறைந்த பின்னரே பாலம் சீரமைக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments