Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: உடையும் நிலையில் பழைய பாலம்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:11 IST)
கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  
முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள பழைய பாலம் உடையும் நிலையில் காணப்படுகிறது. 
 
காவிரி ஆற்றுக்கு 67,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.
 
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் 18 வது தூண் சரிந்துள்ளது. இதனால் பாலமே உடையும் நிலையில் காணப்படுகிறது. அப்படியே பாலம் உடைந்தாலும் வெள்ளபெருக்கு குறைந்த பின்னரே பாலம் சீரமைக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments