Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை பாம்பை கையால் பிடித்து வீசிய நடிகர் சரத்குமார்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (17:14 IST)
துணிச்சலாக பாம்பை கையால் பிடித்து வீசி இருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார்.
 

 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராடன் அலுவலகம் அருகில் ரோட்டின் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
அப்போது அந்த வேன் ஓட்டுனர், வண்டியின் என்ஜின் பகுதியில் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சரத்குமார், தனது காரில் இருந்து கீழே இறங்கி சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரித்துள்ளார். அதற்கு வேன் ஓட்டுனர், பாம்பு உள்ளே இருக்கிறது, வெளியே வர மறுக்கிறது என்று கூறியிருக்கிறார்.
 
உடனே சரத்குமார், ஓட்டுனரிடமிருந்த குச்சியை வாங்கி தூர எரிந்துவிட்டு, என்ஜின் பகுதியில் பதுங்கி இருந்த பச்சை பாம்பை தனது கையால் பிடித்து எடுத்து கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் பயந்து ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடி இருக்கிறார்கள்.
 
துணிச்சலாக பாம்பை கையில் பிடித்து வீசிய நடிகர் சரத்குமாரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி சென்றிருக்கிறார்கள்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments