Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்: இமெயில் மிரட்டலால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (09:46 IST)
சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மிரட்டல் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலி மிரட்டல் வந்த நிலையில் இன்று சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

ஒய்எம்சிஏ  கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

சில மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மிரட்டல் இமெயில் வந்த ஐபி முகவரியை கண்டுபிடிக்க தற்போது சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழ்நாட்டில் அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments