Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்: இமெயில் மிரட்டலால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (09:46 IST)
சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மிரட்டல் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலி மிரட்டல் வந்த நிலையில் இன்று சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

ஒய்எம்சிஏ  கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

சில மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மிரட்டல் இமெயில் வந்த ஐபி முகவரியை கண்டுபிடிக்க தற்போது சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழ்நாட்டில் அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments