Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஸ்ரீரங்கம் கோவில், ரயில் நிலையத்தில் 29ஆம் தேதி குண்டு வெடிக்கும்': மர்ம கடிதத்தால் பரபரப்பு

'ஸ்ரீரங்கம் கோவில், ரயில் நிலையத்தில் 29ஆம் தேதி குண்டு வெடிக்கும்': மர்ம கடிதத்தால் பரபரப்பு
, செவ்வாய், 25 நவம்பர் 2014 (19:22 IST)
வரும் 29ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என்று கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனால் கோவில் மற்றும் ரயில் நிலையத்தில் மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
 
திருச்சி ஸ்ரீரங்கம் வைணவ தளங்களில் உள்ள ரங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதல் தேசமாக ரங்கநாதர் கோவில் போற்றப்படுகிறது. உலகில் அதிக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ரயில் நிலையத்திற்கும் ஒரு மர்ம கடிதம் வந்தது. இந்த கடிதத்தில் வருகிற 29ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என தகவல் வந்திருந்தது.
 
இதைத் தொடர்ந்து ரயில்வே மேலாளர் கொடுத்த தகவலின் பெயரில் ரயில் நிலைய காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் மற்றும் பயணிகளின் உடைமைகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்கள் முழுவதுமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கோவில்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த கடிதத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil