Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் வரவழைப்பு..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (10:19 IST)
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும்  மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர், கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னர் அபாயம் விளைவிக்கும் விதமாக எந்த விதமான பொருளும் கர்நாடக ஆளுநர் மாளிகையில் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து போலி மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
 
 இந்த நிலையில் கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தது யார்? எங்கிருந்து மிரட்டல் விடப்பட்டது? என்பது குறித்து கர்நாடக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments