Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:23 IST)
கோவை மாவட்டம் வடவள்ளி- கணுவாய் சாலை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த மெயில் அனுப்பி மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று கோயம்புத்தூரில் உள்ள  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை மாவட்டம் வடவள்ளி- கணுவாய் சாலை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை செய்து வருகின்ற்னர்.
 
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளிப் பேருந்துகளிலும், பெற்றோர்களின் வாகனங்களின் மூலமும் மாணவர்களை அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments