Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:15 IST)
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
 
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு வியாழக்கிழமை நண்பகல் ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜன.30) காலை 10 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் அனுப்புநர் முகவரி, மஞ்சு, திருச்செங்கோடு, நாமக்கல் என எழுதப்பட்டிருந்தது.
 
இதைப் படித்துப் பார்த்து கல்லூரி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments