Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி தோட்டா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி?

திருச்சி தோட்டா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (10:01 IST)
திருச்சியில் உள்ள துறையூர் தனியார் தோட்டா தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.


 
 
துறையூர் அருகே முருங்கப்பட்டியில் தனியார் தோட்டா வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் கூறிவந்த நிலையில், இன்று காலை தொழிற்சாலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த வெடி விபத்து காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த பகுதி பயங்கர புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த வெடி விபத்தின் போது அங்கு 30-க்கும் அதிகமானோர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இதில் தொழிற்சாலையின் உள்ளே பணியில் இருந்த 20 பேர் பலியாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அவர்களில் 4 பேர் உயிர் தப்பினர் உள்ளனர். சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments