Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்கள் அறிவிக்க சில தினங்களே உள்ளது: ஆர்.கே. நகர் தொகுதி குறித்து பாஜக கருத்து

நாங்கள் அறிவிக்க சில தினங்களே உள்ளது: ஆர்.கே. நகர் தொகுதி குறித்து பாஜக கருத்து
, வெள்ளி, 29 மே 2015 (03:06 IST)
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து, சில தினங்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த ஜூன் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக முதன்முதலில் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் பின்பு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் அறிவித்து.
 
இந்நிலையில், சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து,  கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும். அதன் பின்பு அத்தொகுதியில் பாஜக போட்டியிடுமா? என்பது குறித்து சில தினங்களில் அதிகாரபூர்வ அறிவிப்போம் என்றார்.

தமிழகத்தில் அதிமுகவுன் பாஜக நெருங்கிவருவதாக கூறும் இவ்வேளையில் பாஜகவின் முடிவை தமிழகத்தில் உள்ள பெரும்பலான அரசியல் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil