Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாஜக நல்ல பெயர் எடுக்க நினைத்ததை அதிமுக கெடுத்தது’: விஜயகாந்த் பளீர்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (16:33 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் தமிழக அரசு முந்திக் கொண்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவகொழுந்து இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி பின்வருமாறு:

மத்திய பட்ஜெடை தமிழக அரசு வரவேற்று உள்ளதே?

அவர் வரவேற்க தான் செய்வார். இந்த பட்ஜெட்டில் நல்லதும் இருக்கிறது. கெடுதலும் இருக்கிறது. இரண்டும் கலந்து தான் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு எப்படி இருந்தது?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் தமிழக அரசு முந்திக்கொண்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுவி இருகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்?

தமிழக அரசு மத்திய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு சொல்லுகிறார்களா? இல்லை, மத்திய அரசிடம் இருந்து தப்பிக்க இது போன்று சொல்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

ஒசாமா பின்லேடன் படம் இருந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளாரே?

அப்படி எல்லாம் இல்லை. அப்படி எதுவும் வாட்ஸ் அப்பில் வரவில்லையே.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments