Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ்- அன்புமணி கருத்து வேறுபாடு ; கூட்டணியால் பா.ம.க. வில் குழப்பம் ?

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (11:28 IST)
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில் இன்னும் தேமுதிக வும் பாமக வும் மட்டும் எதுவும் அறிவிக்காமல் உள்ளன.

விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைய இருக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்ப்புறமான அதிமுக அணியில் இருந்து கூட்டணிக்  குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால் அதிமுக அணியில் பாஜக இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அதேப் போல பாமக வும் அதிமுக அணியில் இருந்தால் பலம் அதிகமாகும் என டெல்லித் தலைமை நினைக்கிறது. இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பாமகவின் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணி ராமதாஸ் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாமல் உள்ளாராம். இதற்குக் காரணம் அன்புமணி திமுகக் கூட்டணிக்கு செல்லவே விருப்பம் காட்டுகிறாராம். ஆனால் அங்கிருந்து நேர்மறையான பதில் எதுவும் வராததால் காத்த்க்கொண்டிருக்கிறாராம். ஆனால் ராமதாஸோ அதிமுக கூட்டணிக்குச் செல்லலாம். அங்கு சென்றால் அதிகமான சீட் பெறமுடியும். மேலும் தேர்தல் நிதியும் அதிகமாகப் பெறலாம் என நினைக்கிறாராம். இதனால் கூட்டணி அமைப்பது யாருடன் என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அன்புமணியை  இழுப்பதற்கு இப்போது பாஜக களத்தில் இறங்கியுள்ளதாகவும் அமித் ஷா மூலம் அன்புமணியோடு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பாமக வில் இருந்து கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments