Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகா வாங்கிய பாஜக; பெருமூச்சு விட்ட அதிமுக: ப்ராப்ளம் சால்வ்!

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (11:58 IST)
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக தனித்து போட்டியிடவில்லை என்றும் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்க அதிமுக மறுத்ததால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவும் விருப்பமனுக்களைப் பெற்று வேட்பாளர்களிடம் நேர்காணல் செய்து வருகிறது. இதனால் அதிமுக யாருக்கு ஆதரவு அளிப்பது என குழம்பி இருந்தது. 
இந்நிலையில் இன்று, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக தனித்து போட்டியிடவில்லை என்றும் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் சற்று ஓய்ந்துள்ளது. அதோடு அதரவு இன்றி தனித்து போட்டியிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாஜக இந்த முடிவை எடுத்திருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments