Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு திடீர் போராட்டம்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:39 IST)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு உள்பட பாஜகவினர் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமீபத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
 
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ,மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 
 
அண்ணாமலை போன்ற இமாலய தலைவர் மீது வழக்கு போட்டால் மிரண்டு போய் அறையில் உட்கார்ந்து விடுவார் என முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் அது தவறு என்றும் வழக்கு போட்ட இரண்டாவது நாள் நாகர்கோவிலுக்கு சென்று பேசிய முதல்வர் ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள் என பயந்தது ஏன் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் கரு நாகராஜன் பேசினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments