Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி சுரங்க விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுத்த அண்ணாமலை..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (15:10 IST)
கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டி எடுக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கோரிக்கை மனுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து மனு தெரிவித்துள்ளார். 
 
நிலக்கரி சுரங்கத் அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு விவசாய நிலங்களில் நிலக்கரி சுலங்கம் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரஹ்லாத் ஜோஷி 
 அவர்களை, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் திரு சிடி ரவி அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழக பாஜக சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments