Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி சுரங்க விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுத்த அண்ணாமலை..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (15:10 IST)
கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டி எடுக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கோரிக்கை மனுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து மனு தெரிவித்துள்ளார். 
 
நிலக்கரி சுரங்கத் அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு விவசாய நிலங்களில் நிலக்கரி சுலங்கம் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரஹ்லாத் ஜோஷி 
 அவர்களை, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் திரு சிடி ரவி அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழக பாஜக சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments