Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7.5% இட ஒதுக்கீடு கூடாது என கடிதம் எழுதிய நிர்வாகி பாஜகவில் இருந்து நீக்கம்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:41 IST)
நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது இந்த மசோதா ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் இது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதிமுக, திமுக, பாஜக உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆளுநர் இந்த மசோதாவுக்கு விரைவில் கையெழுத்திட வேண்டும் என்றும் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர் 
 
குறிப்பாக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் ஆளுநர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென பாஜகவின் கலை கல்வி பிரிவின் தலைவர் நந்தகுமார், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கூடாது என தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்திய நிலையில் பாஜக தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்து பாஜகவிலிருந்து அவரை நீக்கி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments