Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் துணிக்கடைகளை கொளுத்திவிட்ட பாஜக தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (19:13 IST)
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினரால் நான்கு துணிக்கடைகள் எரிந்து சாம்பலாகின.

மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நான்கு துணிக்கடைகள் உள்ளன. பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பாஜகவினர் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ துணிக்கடையில் பரவி மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் முழுவதும் எரிந்து நாசமடைந்தன. இதில் கோபம் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு போலீஸார் அங்கு வந்து இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments