இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

Mahendran
சனி, 1 நவம்பர் 2025 (16:23 IST)
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் தமிழக அரசை கடுமையாகச் சாடினார்.
 
ராஜராஜ சோழன் திறமையான ஆட்சி செய்தவர் என்று புகழ்ந்தார். ராஜேந்திர சோழனின் 1000-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுச் சோழர்களின் புகழைப் பரப்பியதைச் சுட்டிக்காட்டினார். தஞ்சை பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலையை உள்ளே வைப்பது குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதம் காரணமாக நெல் மூட்டைகள் தேங்கி, முளைத்து கெட்டு வீணாவதாகவும், விவசாயிகள் போராடி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.  இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சினிமா பார்த்து வருவதாக கடுமையாக விமர்சித்தார்.
 
"தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் 140 நாட்களே உள்ளன. கவுண்டவுன் தொடங்கிவிட்டது" என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்தார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments