Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலர்ந்தது தாமரை; போட்டியின்றி தேர்வான முதல் பாஜக கவுன்சிலர்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:22 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில் கமுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றிப் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்று வேட்புமனு திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 11 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வார்டில் ஒரு நபர் மட்டுமே வேட்புமனு அளிக்கும் பட்சத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத்தால் வேட்புமனு அளித்த ஒரு நபர் கவுன்சிலராக தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 10 சுயேட்சை வேட்பாளர்களும், 1 பாஜக வேட்பாளரும் வெற்றிப் பெற்றுள்ளனர். இதன்மூலம் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் வெற்றியை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments