Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பு?

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (11:51 IST)
அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். 
 
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
 
அதன்படி, தமிழக பாஜக துணை தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தன் மீதான வழக்குகள் குறித்து அண்ணாமலை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்ற எதிர்க்கட்சியினர் புகாரை அடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். பின்னர் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவரது மனு ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments