Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும்: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2016 (00:50 IST)
தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் சமூக வலைதள ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று தமிழகம் உள்ள சூழலில் ஒரு மாற்று அணி கட்டாயம் தேவை. பாஜக கூட்டணியை விட்டு சிலர் வெளியேறலாம். ஆனால், பலர் பாஜக கூட்டணி நோக்கி வரலாம். பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
 
பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் சட்ட மன்றத் தேர்தலை பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றார். 

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments