Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (16:02 IST)
சென்னையில் புத்தாண்டு தினத்தில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 242 பேர்களின் பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

புத்தாண்டு ஒட்டி சென்னையில் சட்டவிரோதமாக ஒவ்வொரு ஆண்டும் பைக் பந்தயங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பந்தயங்கள் நடத்தக்கூடாது என ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் கூடுதல் பாதுகாப்பிற்காக 19000 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக 242 பைக்குகளை பறிமுதல் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை அபராதம் விதிக்காமல் உரியவர்களிடம் எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மீண்டும் பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments