Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (16:02 IST)
சென்னையில் புத்தாண்டு தினத்தில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 242 பேர்களின் பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

புத்தாண்டு ஒட்டி சென்னையில் சட்டவிரோதமாக ஒவ்வொரு ஆண்டும் பைக் பந்தயங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பந்தயங்கள் நடத்தக்கூடாது என ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் கூடுதல் பாதுகாப்பிற்காக 19000 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக 242 பைக்குகளை பறிமுதல் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை அபராதம் விதிக்காமல் உரியவர்களிடம் எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மீண்டும் பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களுக்கு நீண்ட கால விசாக்களை மறுக்கக்கூடாது: அன்புமணி

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு.. உபி முதல்வர் யோகி அதிரடி..!

ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சிறுவன்..!

மூளையை தின்னும் அமீபா நோய்.. கேரளாவில் இன்னொரு உயிர் பலி..!

"திமுக தமிழைத் திருடிவிட்டது": துக்ளக் குருமூர்த்தியின் காரசாரமான பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments