Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்ரேஸ்.. விரட்டி பிடித்த காவல்துறையினர்..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (07:58 IST)
சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலை மற்றும் பீச் சாலையில் அவ்வப்போது பைக் ரேஸ்சில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் பைக் ரேஸ்சில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என காவல்துறை எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அண்ணா சாலையில் 1:30 மணி அளவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் வெளியானது. இதனை அடுத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்த போது கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக சென்ற இளைஞர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

அதி வேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments