சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்ரேஸ்.. விரட்டி பிடித்த காவல்துறையினர்..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (07:58 IST)
சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலை மற்றும் பீச் சாலையில் அவ்வப்போது பைக் ரேஸ்சில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் பைக் ரேஸ்சில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என காவல்துறை எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அண்ணா சாலையில் 1:30 மணி அளவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் வெளியானது. இதனை அடுத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்த போது கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக சென்ற இளைஞர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

அதி வேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments