பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களின் மூலமாக, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களது வேண்டுகோளை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.