தொடர் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Siva
வியாழன், 27 ஜூன் 2024 (07:10 IST)
தொடர் கன மழை காரணமாக பவானி ஆற்றங்கரை வர பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
பவானி ஆற்றில் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பவானி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொது மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 கன அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments