Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: முதலமைச்சர் மோடிக்கு பரிந்துரை

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (15:03 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுக்க உள்ளார்.


 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார். அப்போது தமிழ்நாட்டில் ‘வர்தா’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா” விருது அளிக்க வேண்டியும், முழு திருவுருவ வெங்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments