Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி யாருக்கு? : களை கட்டும் பெட்டிங்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (10:03 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலம் மாவட்டத்தில் வெள்ளி கட்டிகளை வைத்து பெட்டிங் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

 
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.  இதனையடுத்து, இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலத்தில் பெட்டிங் சூடுபிடித்துள்ளது. சேலத்தில் வெள்ளி தொழில் அதிகமாக நடப்பதால் தொழிலாளர்கள் 100 முதல் 500 கிராம் வரையும், பட்டறை உரிமையாளர்கள் கிலோக்கணக்கிலும் பந்தயம் கட்டுவதாக கூறப்படுகிறது.
 
கடந்த பொதுத்தேர்தல் வரை திமுகவினரும் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பதால் இந்த முறை அவர்கள் பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்களை இழுக்கும் பொருட்டு இரு மடங்கு வெள்ளி கட்டிகள் மற்றும் இரு மடங்கு தொகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments