Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட் பெல்ட் அணிந்ததால் உயிரை விட்ட பிரபல தொழிலதிபர்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (00:33 IST)
காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் சீட் பெல்ட் அணிந்ததால் காரில் பயணம் செய்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
பெங்களூருவைச் சேர்ந்த பிரபால தொழிலதிபர் திலிப் குமார் என்பவர் பெங்களூரு மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய  இடங்களிலும் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு கோவை வழியாக தனது குடும்பத்துடன் இன்று சென்றார்
 
அப்போது கார் கோவை அருகேயுள்ள மதுக்கரை என்ற இடத்தில் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திலீப் காரை உடனே நிறுத்திவிட்டு மனைவி, மற்றும் குழந்தைகளை காரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கூறினார். ஆனால் அவர் காரில் இருந்து வெளியேற சீட் பெல்ட்டை கழட்ட முடியவில்லை. அவர் சீட் பெல்ட்டை கழற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தீ மளமளவென கார் முழுவதும் பரவி குடும்பத்தினர் கண்முன்னே தீயின் கொடுமைக்கு பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments