Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீலா ராஜேஷ் பற்றி அவதூறு பரப்பிய மர்ம நபர்! சைபர் க்ரைம் வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (09:46 IST)
தமிழகத்தின் சுகாதாரச் செயலாளரான பீலா ராஜேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மேற்பார்வையிட்டு வரும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தினசரி நிலவரங்களை தெரிவித்து வந்தார். ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின் போது பீலா ராஜேஷ், கொரோனா முதல் நோயாளி பிப்ரவரியிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்றொரு முறை மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் அவதூறு பரப்பியுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் என்று பதிந்துள்ளனர். மேலும் அந்த நபர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments