Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார்: ரயில்வே துறை

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:17 IST)
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி வழித்தடத்தின் வணிக திட்ட அறிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது.  
 
இந்த திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்படைத்தவுடன் தமிழ்நாடு அரசு எப்போது வேண்டும் என்று கேட்கிறதோ அப்போது கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் முழுவதுமாக ஒப்படைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் அறிவித்துள்ளார். 
 
எனவே கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் விரைவில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments