Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு பக்கமும் தாக்கும் புயல்கள்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (15:29 IST)
அரபிக்கடலில் மஹா புயல் மையம் கொண்டுள்ள நிலையில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அது தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “மஹா புயலினால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கேரளா மற்றும் லட்சத்தீவுகள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு நவம்பர் 4ம் தேதி முதல் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments