Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பார் நாகராஜ்: மேலும் 4 வீடியோகள் லீக்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:24 IST)
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20-க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். 
இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நால்வர் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பார் நாகராத் பெயரும் அடிப்பட்டது. இதனால், பார் நாகராஜ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். 
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில வீடியோகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பார் நாகராஜ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பதிவாகியுள்ளது. பார் நாகராஜ் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல்களை கொடுக்க மறைந்திருந்து ஒருவன் இந்த வீடியோவை எடுத்துள்ளான். 
பார் நாகராஜ் பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறான். பைனான்ஸ் தொழிலுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், இன்று பொதுமக்கள் பார் நாஜராஜின் கடையை அடித்து துவம்சம் செய்தனர்.

தற்போது இவன் நேரடியாக இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருபதால் மேலும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என தெரிகிறது. பார் நாகராஜ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்படாடஹ் நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளதால் போலீஸார் அவனையும் பாலியல் வழக்கில் கைது செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்