Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம் ! 2 மணிநேரம் குறைப்பு!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:37 IST)
கொரோனா காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பணப் பரிவர்த்தனைத் தவிர மற்ற வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கான கிஸான் திட்டப் பணம், ஜன்தன் பணம் மற்றும் சமையல் எரிவாயுக்களானப் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டதால் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமானதை அடுத்து இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்து இப்போது மீண்டும் 20 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய படி 10 மணி 2 மணி வரை மட்டுமே இயங்கும் என மாநில வங்கிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments