வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்: செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (12:02 IST)
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அழைத்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் உடனடியாக செந்தில் பாலாஜி வீட்டுக்கு அழைக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ துணைப்படை வீரர்கள் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments