Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி மேலாளர் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை: திருச்சியில் பயங்கரம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:37 IST)
திருச்சியில் பட்டப்பகலில் வங்கி மேலாளர் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சியில் ரயில்வே போலீசாக பணி புரியும் 55 வயது ரங்கராஜ் என்பவருக்கும் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வங்கி மேலாளர் புகழேந்தி என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது இதனை அடுத்து ரயில்வே போலீஸ் ரங்கராஜ், புகழேந்தியின் அண்ணன் கோவேந்தன் என்பவரால் சில நாட்களுக்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் 
 
இந்த வழக்கில் கோவேந்தன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில் கோவேந்தன் மற்றும் அவரது சகோதரர் புகழேந்தி ஆகியோர்களை கொலை செய்ய ரங்கராஜன் உறவினர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது 
 
இதனையடுத்து வங்கி மேலாளர் புகழேந்தி வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் இடையில் வழிமறித்த ஒரு கும்பல் கோவேந்தன் மற்றும் புகழேந்தியை ஓட ஓட விரட்டியது இதில் வங்கி மேலாளர் புகழேந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வங்கி மேலாளர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments