Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா யார் என்ற குழப்பத்தில் பங்களாதேஷ் நாளிதழ்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (12:38 IST)
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா  நடராஜனின் புகைப்படத்திற்குப் பதிலாக, சசிகலா புஷ்பாவின் புகைப்படத்தை, பங்களாதேஷ் நாளிதழ் ஒன்று தவறாக வெளியிட்டுள்ளது.

 
இதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்ற குழப்பம் தமிழகம் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் குழப்பம்  எழுந்துள்ளது. பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, போட்டிபோட களத்தில் இறங்கினார். ஆனால், அவரது கணவர் அதிமுக தொண்டர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
 
இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜனை ஒருமனதாகத் தேர்வு  செய்தனர். இதுபற்றிய செய்தியை பங்களாதேஷில் வெளியாகும் த டெய்லி அப்செர்வர் (TheDailyObserver) என்ற நாளிதழ், செய்தி வெளியிட்டது. ஆனால், முகப்புப் பக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு எனக் கூறி, சசிகலா நடராஜன் புகைப்படத்திற்குப் பதிலாக, சசிகலா புஷ்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை டிசம்பர்  30ஆம் தேதி வெளியான நாளிதழில் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments