Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2015 (22:36 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த ஏப்ரல் மாதம் அரசு கேபிள் டிவி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறி உள்ளதாக, அரசு கேபிள் டிவி தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ராமதாஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா முன்பு ராமதாஸ் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம், வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது. 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments