Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஸ்மோக் பிஸ்கட்டுக்குத் தடை.! உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி..!!

Senthil Velan
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:18 IST)
சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இது குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ள, மாநில உணவு பாதுகாப்புத்துறை திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாகவும், அதை மீறி அதை பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நைட்ரஜனை திரவமாகவும், வாயுவாகவும் உணவு பதப்படுத்த மற்றும் பேக்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதற்கும் உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோன்ற தேவைகளை தாண்டி வேறு எதற்காகவும் நைட்ரஜனை வாயுவாகவோ அல்லது திரவமாகவோ முற்றிலும் பயன்படுத்த தடை விதிப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
அதையும் மீறி பயன்படுத்தினால், சட்டத்தின் பிரிவு எண் 55,56,58,59 மற்றும் 63,65,69 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதிலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்றவர் இந்த தவறை இழைத்தால், அவரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், வணிக பணிகளுக்கும் தடை விதிக்கப்படும். அது மட்டும் இன்றி சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதே நேரம், குற்றம் இழைத்தவர் உணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழ் பெற்றவராக இருந்தால், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன் வணிக செயல்பாடுகளுக்கும் தடை விதித்து அபராதமும் விதிக்கப்படும்.

ALSO READ: தங்கு தடையின்றி மின்சாரம்..! தலைமை செயலாளர் ஆலோசனை.!!
 
உரிமமும், சான்றிதழும் இல்லாதவர் இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில், நுகர்வோர் பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டாலோ அவர் மீது 59, 63,65 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments