Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை தமிழக அரசால் நிறுத்த முடியாது: முன்னாள் துணைவேந்தர்

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (19:21 IST)
நீட் தேர்வை தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் தமிழக அரசின் பேச்சை நம்பாமல் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது என்றும் நீட்தேர்வு தடுக்க முடியாது என்று தமிழக அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றாக தெரியும் என்றும் இருப்பினும் மாணவர்களை குழப்பி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் நீட்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்றும் தமிழக அரசு உட்பட யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவது போல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வாய்ப்பே இல்லை என்றும் எனவே மாணவர்கள் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பாமல் நீட் தேர்வுக்கு தயாராவது இதுதான் சரியான வழி என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments