Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1931ம் ஆண்டுக்குப் பிறகு அதிகமழை.. பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (14:19 IST)
1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மேலும் கூறியதாவது:
 
மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இது மேகவெடிப்பு அல்ல என்று கூறிய அவர், 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்று தான் அர்த்தம்,
 
மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை என்றும், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments